;
Athirady Tamil News

தேர்தலில் துருக்கி அதிபர் முன்னிலை!!

0

துருக்கியில் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதிபர் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சித் தலைவரான தற்போதைய அதிபர் எர்டோகனுக்கு (69) எதிராக குடியரசு மக்கள் கட்சித் தலைவரான கெமால் கிலிச்டாரோலு (74) எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார். தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்பில் எர்டோகனைவிட எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் கெமல் அதிக வாக்குகள் பெறுவார் எனத் தெரியவந்தது.

இதனால் இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வேட்பாளர்களில் ஒருவர் பதிவான வாக்குகளில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற வேண்டும். இந்நிலையில் அதிபர் தேர்தலில் தற்போதைய அதிபர் எர்டோகன் 49.6% வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். 6 கட்சிகள் சார்பில் அதிபர் எர்டோகனுக்கு எதிராக போட்டியிடும் கிலிசிக் 44.7% வாக்குகள் பெற்று பின்னடைவைச் சந்தித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.