;
Athirady Tamil News

கப்பலில் கிரிக்கெட் விளையாடிய குழுவினர்- பந்து கடலில் விழுவதை தடுக்க புதிய வழி!!

0

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த விளையாட்டாக கிரிக்கெட் மாறி உள்ளது. சிறிய இடம் கிடைத்தாலும் கூட அதில் 4, 5 பேர் சேர்ந்து ஒரு குழுவாக கிரிக்கெட் விளையாடுவதை பார்க்க முடிகிறது. ஆனால் கடலில் சென்று கொண்டிருக்கும் கப்பலில் ஒரு குழுவினர் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அதில் கப்பலில் கிரிக்கெட் விளையாடும் குழுவினர்களில் ஒருவர் பந்தை ஓங்கி அடிக்கிறார். பந்து கடலில் விழுகிறது. ஆனால் அந்த பந்தில் கயிறை கட்டி இருப்பதால், கடலுக்குள் விழுந்த பந்தை வெளியே எடுப்பது போன்று காட்சிகள் உள்ளது. இந்த வீடியோ அதிக லைக்குகளை அள்ளி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.