;
Athirady Tamil News

கலை நிகழ்ச்சியில் திடீர் துப்பாக்கிச்சூடு- போஜ்புரி பாடகி படுகாயம்!!

0

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள சரண் மாவட்டத்தை சேர்ந்த பாடகி நிஷா உபாத்யாய். போஜ்புரி பாடகியான இவர் பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்று மேடைகளில் பாடி வருகிறார். இந்நிலையில், பாட்னாவில் நடைபெற்ற கலாச்சார நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட நிஷா மேடையில் ஆடலுடன் பாடிக் கொண்டிருந்தார். அப்போது, அவர் மீது திடீரென துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில், நிஷாவின் இடது தொடையில் பலத்த காயம் ஏற்பட்டு விழுந்தார்.

இதையடுத்து நிஷாவை உடனடியாக மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். அங்கு, நிஷாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அவரது உடல் நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நிஷா இதுவரை எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கவில்லை என்றாலும் துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.