ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் மீண்டும் எரிமலை வெடிப்பு
ஐஸ்லாந்தின் ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் கடந்த டிசம்பர் மாதத்தில் இருந்து நான்காவது முறையாகவும் எரிமலை வெடித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் உள்ள ஸ்டோரா ஸ்கோக்ஃபெல் மற்றும் ஹகாஃபெல் இடையே எரிமலை வெடிப்பு ஆரம்பமாகியுள்ளதாக ஐஸ்லாந்தின் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எரிமலை வெடிப்பினால் சுமார் மூன்று கிலோமீற்றர் (சுமார் 1.9 மைல்) நீளமான பிளவு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கட்டுப்படுத்த நடவடிக்கை
இதேவேளை ஐஸ்லாந்தின் முக்கிய சர்வதேச விமான நிலையம், கெப்லாவிக் விமான நிலையம் மற்றும் பிற பிராந்திய விமான நிலையங்கள் முழுமையாக செயற்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.