;
Athirady Tamil News

ஜேர்மனியில் புதிய அரசை அமைக்கவுள்ள ஃப்ரிட்ரிக் மெர்ஸ்., அடுத்த வாரம் சேன்சலராக பதவியேற்பு

0

ஜேர்மனியில் கட்சி கூட்டணிகள் உடன்பாடுக்கு வந்துள்ள நிலையில், கான்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) அடுத்த வாரம் புதிய அரசை அமைக்கவுள்ளார்.

சமூக ஜனநாயகக் கட்சி (SPD) 84.6% வாக்குகள் ஆதரவுடன் கூட்டணியை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து, மெர்ஸ் மே மாதம் 7-ஆம் திகதி ஜேர்மனியின் சேன்சலராக பதவியை ஏற்க உள்ளார்.

69 வயதான மெர்ஸ், ஜேர்மனியின் பின்வாங்கிய பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுக்கும் திட்டத்துடன் ஆட்சியை மேற்கொள்கிறார்.

குறிப்பாக இரண்டாண்டுகளாக இறங்கியுள்ள ஜேர்மனியின் பொருளாதார வளர்ச்சி, இப்போதைக்கு 0.2% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

மெர்ஸ், உக்ரைனுக்கு தொடர்ந்த ஆதரவை உறுதிசெய்வதுடன், பாதுகாப்பு முதலீடுகளை அதிகரித்து, இராணுவத்தை மேம்படுத்தவுள்ளார்.

முன்னாள் தலைவரான ஒலாப் ஷோல்ஸின் மூன்று கட்சி கூட்டணி கடந்த நவம்பரில் சிதைந்ததைத் தொடர்ந்து, பிப்ரவரி 23-ல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் மெர்ஸ் தலைமையிலான CDU/CSU கட்சி 28.5% வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றது.

SPD உறுப்பினரான லார்ஸ் கிளிங்க்பெயல் (Lars Klingbeil), நிதியமைச்சராகவும் துணை அதிபராகவும் நியமிக்கப்பட உள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.