;
Athirady Tamil News

கணவர் வெளிநாட்டில்; யாழில் இளம் குடும்ப பெண் திடீர் மரணம் ; வெளியான அதிர்ச்சி காரணம்

0

யாழில் கடன் தொல்லை காரணமாக இளம் குடும்பப் பெண் ஒருவர் தவறான முடிவெடுத்து உயிர்மாய்த்துள்ளார்.

இளவாலை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் உயிர்மாய்த்த பெண்ணிற்கு கடன் கொடுத்தவர்களால் தொல்லை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் உயிர்மாய்த்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டதுடன் மேலதிக விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.