;
Athirady Tamil News

கனடாவின் காட்டுத்தீயால் அமெரிக்காவிற்கு ஏற்பட்ட பாதிப்பு

0

கனடாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் ஏற்பட்ட புகை, அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் காற்றின் தரத்தை புதன்கிழமை முதல் மோசமாக்கி வருகிறது, என அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (EPA) தெரிவித்துள்ளது.

இந்த காட்டுத்தீயால் பல ஆயிரக் கனடா குடிமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த புகை ஐரோப்பாவிற்கு கூட பரவியுள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில், மத்திய மேற்கு பகுதியில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கான்சாஸ் சிட்டி முதல் மினியாப்பொலிஸ் வரை பல நகரங்களில் புகை வானை மூடிய நிலையில் உள்ளது.

அந்த பகுதியில் காற்றுத் தூய்மைத்தரக் குறைபாடுகள் உள்ளதாக தெரிவிக்கப்படுகுின்றது.

அமெரிக்கரின் அயோவா மாநிலம் முழுவதும் காற்று தர எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது (வியாழன் காலையில் முடிவடையும் வரை). பொதுமக்கள் வெளியே செயற்படுவதை குறைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விஸ்கான்சின் மாநிலத்திலும் இதேபோல் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன, புகை தெற்கே பரவுவதால். மிசிகனில், மக்கள் ஜன்னல்களை மூடுமாறும், வெளிப்புற உடற்பயிற்சிகளை தவிர்க்குமாறும், மூச்சுத்திணறல் ஏற்பட்டால் சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.