;
Athirady Tamil News

மருத்துவ மாணவியை கூட்டாக சீரழித்த கும்பல் ; மீண்டும் அரங்கேறிய கொடூரம்

0

மேற்குவங்க மாநிலத்தின் துர்காபூரில் உள்ள ஷோபாபூர் அருகே உள்ள தனியார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் மாணவி பாலியல் வன்கொடுமை உள்ளாக்கப்பட்டுள்ளார்.

குறித்த மருத்துவமனையில் ஒடிசா மாநிலம் ஜலேஸ்வரை சேர்ந்த மாணவி 2ஆம் ஆண்டு படித்து வருகிறார்.

மருத்துவமனையில் சிகிச்சை
குறித்து மாணவி நேற்று இரவு 8.30 மணிக்கு கல்லூரி வளாகத்தை விட்டு ஆண் நண்பருடன் இரவு உணவருந்த வெளியே சென்றுள்ளார். அப்போது ஒரு கும்பல் மாணவியின் நண்பரை தாக்கியுள்ளது.

அந்த இளைஞனை அங்கிருந்து துரத்திவிட்டு, மாணவியை தரதரவென இழுத்துச் சென்று மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஒதுக்குபுறமாக பகுதியில் வைத்து அந்த கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ளது.

அந்த சமயத்தில் வளாகத்தில் காவலர்கள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த மாணவி தற்போது படுகாயங்களுடன் அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கொல்கத்தாவில் கடந்த ஆண்டு ஆர்.ஜி.கர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சஞ்சய்ராய்க்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த சம்பவம் போலவே தற்போது மீண்டும் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவமும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.