;
Athirady Tamil News

பிரித்தானிய இளவரசர் நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரிப்பு

0

எப்ஸ்டீன் விவாகரம் தொடர்பில் பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரித்துள்ளது.

பிரித்தானிய அரச குடும்ப உறுப்பினரான யார்க் இளவரசர் ஆண்ட்ரூ, எப்ஸ்டீன் விவாகரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

2019-ஆம் ஆண்டு அரச பொறுப்புகளில் இருந்து விலகிய பிறகு, அவர் மீது எழுந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து வந்தார்.

ஆனால், சமீபத்தில் வெளிவந்த ஒரு மின்னஞ்சல், அவர் எப்ஸ்டீனுடன் தொடர்பை முடிந்துவிட்டதாக கூறியதை மறுக்கிறது.

2011-ஆம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் திகதி அனுப்பப்பட்ட அந்த மின்னஞ்சலில், “நாம் இதற்குள் சிக்கியுள்ளோம், அதை மீறி மேலே எழ வேண்டாம்” என ஆண்ட்ரூ எழுதியதாக கூறப்படுகிறது.

இது அவர் எப்ஸ்டீனுடன் தொடர்பை முடித்துவிட்டதாக 2010-ஆம் ஆண்டு கூறியதற்கு பிறகு 3 மாதங்களில் அனுப்பப்பட்டது.

இந்த தகவல் வெளியானதும், அரண்மனை ஊழியர்கள் அதிர்ச்சி மற்றும் விரக்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.

“அவரிடம் சிறிது நேர்மையாவது இருந்தால், நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என ராயல் விமர்சகர் Matt Wilkinson கூறியுள்ளார்.

ஆண்ட்ரூ, 2019-ல் எப்ஸ்டீனுடன் தொடர்புடைய பாலியல் குற்றச்சாட்டை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்து வைத்தார்.

அவர் குற்றங்களி நிராகரித்து வந்தாலும், இந்த புதிய தகவல்கள் அவர் மீதான நம்பகத்தன்மையை கேவுக்குள்ளாக்குகின்றன. இந்நிலையில், அவர் நாட்டை விட்டு வெளியேற அழுத்தம் அதிகரித்து வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.