;
Athirady Tamil News

சிறைச்சாலையிலிருந்த இரு கைதிகள் தப்பியோட்டம்

0

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு கைதிகள் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்து நேற்று (26) தப்பிச் சென்றதாக பல்லேகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறைச்சாலையின் பேக்கரி பிரிவில் பணிபுரிந்து கொண்டிருந்த இரு கைதிகளும் சிறைச்சாலை அதிகாரிகளின் காவலில் இருந்த கொழும்பு- 5 ஐச் சேர்ந்த 37 வயதுடையவர் மற்றும் கொழும்பு 15, மட்டக்குளியவைச் சேர்ந்தவர்களே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்களைக் கைதுசெய்ய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பல்லேகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.