;
Athirady Tamil News

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு!

0

வவுனியாவில் பதிவாளர் நாயகத்தின் வடக்கு வலய பதிவறை திறந்து வைப்பு!

பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் வடக்கு வலய பதிவறை வவுனியா, கனகராயன்குளம் பகுதியில் திறந்து வைக்கப்பட்டது.

இன்று (30.07.) வவுனியா மாவட்டம் ஏ9 வீதி கனகராயன்குளம் – மன்னகுளம் பகுதியில் பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன அவர்களால் உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

வடக்கு மாகாண மக்களின் நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் நிறுவப்பட்டுள்ள இந்தப் பதிவறையின் மூலம், பிறப்பு, இறப்பு மற்றும் திருமணப் பதிவுகள் சேதமடைந்திருந்தால், அவற்றின் பிரதிகளை இதுவரை கொழும்பு மாளிகாவத்தையில் அமைந்துள்ள பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் தலைமையகத்தில் மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டியிருந்த நிலைமை மாற்றமடைந்துள்ளது.

இனிமேல் குறித்த ஆவணங்களை வவுனியாவில் அமைந்துள்ள வடக்கு வலய பதிவறையிலேயே பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும், உடனடியாக பிறப்புச் சான்றிதழ்களை வழங்கும் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலங்களில் திருமணச் சான்றிதழ் மற்றும் இறப்புச் சான்றிதழ்களை இவ்வலுவலகத்தின் ஊடாக பெற்றுக்கொள்ளும் வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன.

இந் நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வத்தம்பி திலகநாதன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ஏ.உமாமகேஸ்வரன், பதிவாளர் நாயகம் திருமதி சசிதேவி ஜலதீபன், பதிவாளர் நாயகம் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


You might also like

Leave A Reply

Your email address will not be published.