;
Athirady Tamil News

டொனால்ட் ட்ரம்பிற்கு தென் கொரியாவில் கிடைத்த உயரிய விருது

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு தென் கொரியாவின் மிக உயரிய விருதான Grand Order of Mugunghwa விருது வழங்கப்பட்டுள்ளது.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை மேம்படுத்துவதற்கான அவரது முயற்சிகளுக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நட்பின் அடையாளம்
இந்த விருது முதன் முதலாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளதாக தென் கொரிய ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்த விருது கொரியாவின் நாட்டுத் தலைவர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த கௌரவமாகும். இது தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங்கால் ட்ரம்பிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர நட்பின் அடையாளமாக, தென்கொரிய ஜனாதிபதி லீ ட்ரம்பிற்கு ஒரு பண்டைய கொரிய கிரீடத்தின் பிரதியையும் வழங்கினார்.

இந்த விருதுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்ட அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப், இதை ஒரு பெரிய மரியாதை என்று கூறி, “அழகானது” என்று கூறினார், மேலும் “இதை இப்போதே அணிய விரும்புகிறேன்” என்றும் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.