யாழில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு ; துயரத்தில் குடும்பம்
யாழில் இளம் குடும்பஸ்தர் யாழ் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரைநகர் பகுதியைச் சேர்ந்த 36 வயதுடனைய மூன்று பிள்ளைகளின் இளம் தந்தையே உயிரிழந்தவர் ஆவார் .
யாழ்ப்பாணம் கரைநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் சுகயீனமுற்ற நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று முன்தினம் (3) சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் உடல் கூற்று சோதனைக்கு பின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.