;
Athirady Tamil News

யாழ் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை

0

நல்லூர் பிரதேச சபையின் தவிசாளருக்கு எதிராக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் நேற்று முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி பகுதியில் தனியார் ஒருவரால் மேற்கொள்ளப்படும் விளம்பர சேவையினை முன் அறிவித்தல் இன்றி நிறுத்தியமையால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

தனியார் ஒருவரால் பல வருடங்களாக நடாத்தப்பட்டு வருகின்ற விளம்பர ஒலிபரப்பு சேவையினை அரசியல் பழிவாங்கல் காரணமாக முன்னறிவித்தல் இன்றி உடனடியாக மூடும்படி சபை தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது

இதனை அறிந்த நிறுவன உரிமையாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை இன்று பதிவு செய்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.