;
Athirady Tamil News

அமெரிக்க இறக்குமதி வரிகளால் புதிய திருப்பம் ; உலகளாவிய நிதிச் சந்தையில் நேரடி தாக்கம்

0

இன்றைய உலகளாவிய நிதிச் சந்தை நிலவரங்களின்படி, தொழில்நுட்ப நிறுவனங்களின் சாதகமான வருவாய் அறிக்கைகள் மற்றும் சர்வதேச அரசியல் நகர்வுகள் சந்தையில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

அதன்படி, ஆசியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வைச் சந்தித்துள்ளதாக ரொய்டர்ஸ் செய்திய வெளியிட்டுள்ளது.

குறிப்பாக ஜப்பானின் நிக்கி குறியீடு புதிய உச்சத்தைத் தொட்டதுடன், தென் கொரியாவின் கோஸ்பி (KOSPI) 2 சதவீதத்தால் அதிகரித்துள்ளது.

செயற்கை நுண்ணறிவு (AI) துறையின் முன்னணி நிறுவனமான Nvidia எதிர்பார்த்ததை விட அதிக இலாபத்தை ஈட்டியுள்ளமை முதலீட்டாளர்களிடையே நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் முக்கிய பங்குச் சந்தைக் குறியீடுகளான Nasdaq மற்றும் S&P 500 ஆகியவை தொழில்நுட்பப் பங்குகளின் ஆதரவுடன் இரண்டு வார கால உச்சத்தைத் தொட்டுள்ளன.

ஐரோப்பிய சந்தைகளும் இன்று சாதகமான நிலையிலேயே காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், முன்னாள் ஜனாதிபதி ட்ரம்பின் ‘விடுதலை தின’ (Liberation Day) வரிகளை அமெரிக்க உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ள போதிலும், அதற்குப் பதிலாக 10 முதல் 15 சதவீதம் வரையிலான புதிய உலகளாவிய இறக்குமதி வரிகளை விதிக்க அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதிகள் திட்டமிட்டுள்ளனர்.

இது சீனா மற்றும் இந்தியா போன்ற நாடுகளுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் வட்டி விகிதங்கள் தொடர்பான நிச்சயமற்ற தன்மையால் யென் (Yen) நாணயத்தின் மதிப்பு கடந்த இரண்டு வாரங்களில் இல்லாதவாறு வீழ்ச்சியடைந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.