;
Athirady Tamil News

அமெரிக்க – இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 1000-ஐ கடந்த உயிர்ப் பலி!

0

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல்களால் ஈரானில் இதுவரை 1,046 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானின் அணுசக்தித் திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் அந்நாட்டின் முக்கிய நகரங்கள் மீது கடந்த பிப். 28 அன்று முதல் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்தத் தாக்குதலில், ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா அலி கமேனி மற்றும் அவரின் குடும்பத்தினர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மத்திய கிழக்கு நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க தளங்கள் மற்றும் கட்டமைப்புகளின் மீது ஈரானின் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 1,045 பேர் கொல்லப்பட்டதாக, ஈரான் அரசின் தியாகிகள் மற்றும் முன்னாள் வீரர்களின் விவகாரங்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்தத் தகவலானது, இதுவரை அடையாளம் காணப்பட்டு இறுதிச் சடங்கிற்குத் தயாரான உடல்களின் எண்ணிக்கை எனவும், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, ஈரானில் மகளிர் பள்ளிக்கூடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் சுமார் 160 சிறுமிகள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.