;
Athirady Tamil News

பிரபல பாடசாலைக்குள் நுழைந்து மாணவர்களுக்கு கொலை மிரட்டல் ; மாம்பழத்தால் வந்த வினை

0

பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள ஒரு பிரபல பாடசாலையின் சுவரைத் தாண்டி குதித்து சட்டவிரோதமாக நுழைந்த நபர், இரண்டு உயர்தர மாணவர்களின் கழுத்தில் கூர்மையான ஆயுதத்தை வைத்து மிரட்டியதாக கொட்டாவ கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆண்டு உயர்தர தேர்வுக்குத் தயாராகி வரும் ஒரு மாணவர் குழு, பள்ளி மைதானத்தின் ஓரத்தில் இருந்த ஒரு மாமரத்தில் இருந்து மாம்பழங்களைப் பறித்துக் கொண்டிருந்தனர்.

கூர்மையான ஆயுதத்துடன் மிரட்டல்
இளைஞனை விரட்டிய மாணவர்குழு இதன்போது அருகிலுள்ள வீட்டிலிருந்து ஒரு இளைஞன் அங்கு வந்து மாணவர்களைத் திட்டியதாகவும், அதைத் தொடர்ந்து மாணவர் குழு அந்த இளைஞனை விரட்டிவிட்டு பள்ளிக்குள் நுழைந்ததாகவும் பள்ளியின் பிரதி முதல்வர் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

பின்னர், மாணவர் குழு பாடசாலைக்குள்க்குள் இருந்தபோது, ​​பள்ளியின் சுவரைத் தாண்டி குதித்து பள்ளிக்குள் நுழைந்த சந்தேக நபர், இரண்டு மாணவர்களைப் பிடித்து, கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை அவர்களின் கழுத்தில் வைத்து கொலை செய்வதாக மிரட்டியதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.