;
Athirady Tamil News

தேரருக்கு எதிராக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என சாவகச்சேரி நீதிமன்றில் சுமந்திரன் தாக்கல் செய்த மனு நிராகரிப்பு

0
பலாங்கொடை கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்யகோரி சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
நாவற்குழி விகாரைக்குக் குடிதண்ணீர் எடுக்கச் சென்ற சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோக முயற்சி மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டு, பின்னர் பிணையில் பிக்கு விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸப தேரர் கொழும்பில் செய்தியாளர் மாநாட்டை கூட்டி, நீதிமன்றை அவமதிக்கும் விதத்தில் பகிரங்கமாகக் கருத்து வெளியிட்டுள்ளார் எனவும் , அது நீதிமன்ற அவமதிப்பு என குறிப்பிட்டு , அது தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்ட வேண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அது தொடர்பில் கஸ்ஸப்ப தேரருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுப்பதா என்பது குறித்த தீர்மானத்தையும் நேற்று அறிவிப்பதாக நீதிமன்றம் திகயிட்டிருந்தது.

இந்நிலையில் வழக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை அடுத்து கொள்ளப்பட்ட போது, சந்தேக நபரான பௌத்த பிக்கு பிணை நிபந்தனைகளை இதுவரை மீறவில்லை என்றும் பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் இந்த வழக்கை பொறுத்தவரை மூன்றாவது நபர் என்றும் குறித்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரரின் கூற்றுக்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை தொடுப்பதற்கான தேவைப்பாடுகளை கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்து, விசாரணை மேற்கொள்ள வேண்டும் என கோரிய மனுவை நிராகரித்து கட்டளையாக்கினார்.

இந்நிலையில் குறித்த கட்டளைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.