;
Athirady Tamil News

மின்-கடவுச்சீட்டு திட்டம் தொடர்பில் அரசின் புதிய முடிவு

0

சர்ச்சைக்குரிய மின்-கடவுச்சீட்டு (e-passport) திட்டத்துடன் தொடர்புடைய கொள்முதல் செயல்முறையை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி. பெரேரா தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குறிப்பிட்ட கொள்முதல் செயல்முறையை உடனடியாக ரத்து செய்யுமாறு அமைச்சரவை அறிவுறுத்தியுள்ளதாக, குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் மே 29 அன்று சம்பந்தப்பட்ட ஏலதாரர்களுக்கு (Bidders) மின்னஞ்சல் மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி.பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.