;
Athirady Tamil News

ட்ரம்பிற்கு ஷாக் கொடுத்த சீனா ; அமெரிக்காவை குறிவைக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள்

0

சீனா தனது ராணுவ ரகசியங்களை மறைத்து வரும் வேளையில், அமெரிக்க உளவுத்துறை தற்போது ஒரு அதிர்ச்சி தரும் புதிய ரகசியத் தகவலை வெளியிட்டுள்ளது.

வானில் பறந்து கொண்டே அமெரிக்காவின் அதிமுக்கிய உளவு விமானங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் டேங்கர் விமானங்களைத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்கும் ‘ஹைப்பர்சோனிக்’ ஆயுதங்களைச் சீனா ரகசியமாகத் தயாரித்துள்ளதாக அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.

சீனாவின் இந்த ஆபத்தான ஏவுகணைகள் சுமார் 2 ஆயிரத்து 500 கி.மீ முதல் 8 ஆயிரம் கி.மீ தூரம் வரை பாய்ந்து சென்று, பசிபிக் கடலில் உள்ள அமெரிக்காவின் ‘குவாம்’ மற்றும் ‘ஹவாய்’ ராணுவத் தளங்களை நேரடியாகத் தாக்கும் வல்லமை கொண்டவை என உளவுத்துறை அறிக்கைகள் கூறுகின்றன.

ஒலியை விடப் பல மடங்கு வேகத்தில் சென்று நடுவானில் தன் திசையைத் தானே மாற்றிக்கொள்ளும் இந்த விபரீத ஆயுதத்தை ரேடார்களால் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் அந்நாட்டு பாதுகாப்புத்துறை தற்போது பெரும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.

ஹைப்பர் சோனிக் கிளைடு ஆயுதங்கள், ஹைப்பர்சோனிக் ஏவுகணைகள் மூலம் அனுப்பப்படும். கீழ்வளிமண்டலத்தை எட்டியதும், இது ஏவுகணையில் இருந்து பிரிந்து செல்லும். அதன்பின், தன் இலக்கை நோக்கி பயணிக்கும். அதன்பின், ஒலியை விட பல மடங்கு வேகத்தில் வானில் உள்ள இலக்கை நோக்கி, எதிரியின் ரேடாரில் சிக்காத வகையில் தன் திசையை மாற்றியபடியே சீறிப்பாயும். சில சமயங்களில் திசை மாறி செல்லும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.