புதிய பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவு – வெளியான அறிவிப்பு
அஸ்வெசும கொடுப்பனவு பெற தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் அடுத்த மாதம் தொடக்கம் வழங்கப்படவுள்ளது.
சமூகநலன்புரி சேவைகள் திணைக்களம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மூன்றாம் கட்ட பயனாளிகளின் தெரிவு
அஸ்வெசும கொடுப்பனவுக்கான மூன்றாம் கட்ட பயனாளிகளைத் தெரிவு செய்வதற்கான செயற்பாடுகள் கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
அதன்போது அடையாளம் காணப்பட்ட தகுதியான பயனாளிகளுக்கான கொடுப்பனவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் தொடக்கம் வழங்கப்படும் என்று தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.