;
Athirady Tamil News

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார்-எம்.ஏ.சீ.எம். றியாஸ்

0
அம்பாறை மாவட்டத்தில் கடும் வறட்சி: 3,794 குடும்பங்களுக்குக் குடிநீர் விநியோகம்!

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தயார்

பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சியான வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 3,794 குடும்பங்களுக்கு இதுவரை பௌசர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் தெரிவித்தார்.

மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகள் மற்றும் மக்களின் விவரங்கள் பின்வருமாறு:

பதியத்தலாவ: 17 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 2,910 குடும்பங்களின் 9,177 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகா ஓயா: 865 குடும்பங்களைச் சேர்ந்த 2,800 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நாவிதன்வெளி: 3 கிராம சேவகர் பிரிவுகளைச் சேர்ந்த 19 குடும்பங்களின் 64 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூராட்சி மன்றங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிநடை அமைப்புச் சபை ஆகியவற்றின் ஊடாகத் தொடர்ச்சியாகக் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகின்றது.

மாவட்டத்தின் ஏனைய பகுதிகளிலும் வறட்சியின் தாக்கம் அதிகரிக்கும் பட்சத்தில், பிரதேச செயலாளர்களின் கோரிக்கைக்கு அமைவாகத் தேவையான நிதியை வழங்கி உடனடியாகக் குடிநீர் விநியோகிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன், மாவட்ட, பிரதேச மற்றும் கிராம மட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்புக் குழுக்கள் வலுப்படுத்தப்பட்டு, அதிகரிக்கும் வெப்பநிலையினை எதிர்கொள்வதற்கான சமூக மட்ட அனர்த்த அபாய முகாமைத்துவத் திட்டங்கள் தீவிரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.