;
Athirady Tamil News
Daily Archives

14 March 2023

டெல்லி எம்.எல்.ஏ.க்களுக்கு 67 சதவீதம் சம்பள உயர்வு – ஒப்புதல் அளித்தார் ஜனாதிபதி!!

தலைநகர் டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்குள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு கோரி ஜனாதிபதிக்கு முன்மொழிவு அனுப்பப்பட்டது. அதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. இதனால் அங்குள்ள…

மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் : பலியானோரின் எண்ணிக்கை 100 ஆக உயர்வு!! !

மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 100க்கும் மேற்பட்டோர்பலியாகி விட்டனர். தென்னாப்பிரிக்காவை தாக்கி வரும் பிரெடி புயல் நேற்று மலாவி மற்றும் மொசாம்பிக் பகுதியை கடுமையாக தாக்கியது. இதில் இரு பகுதிகளும் கடுமையாக சேதம் அடைந்தன.…

ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் மறுஅறிவித்தல் வரை இரத்து!!

இலங்கை புகையிரத திணைக்கள ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இன்று முதல் மறுஅறிவித்தல் வரை இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குனவர்தன தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி வெளியிட்பட்ட அரசாங்க அதிவிசேட…

அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளுக்கான முக்கிய அறிவிப்பு!!

அரசுப் பணியில் உள்ள பட்டதாரிகளை ஆசிரியர்களாக சேர்ப்பதற்கான தேர்வு மார்ச் 25 ஆம் திகதி நடைபெற உள்ளது. நாடு முழுவதும் 341 மையங்களில் நடைபெறவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தேர்வின்…

அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும்!!

பண்டிகைக் காலத்தில் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் குறையும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இதனூடாக இறக்குமதியாளர்களுக்கு பாதகமான நிலை ஏற்பட்டாலும் அதன் பயனை பொதுமக்களுக்கு வழங்குமாறு அவர்…

அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை!!

எதிர்காலத்தில் அரசாங்க வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில்…

ஆதிச்சநல்லூரில் விரைவில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் – மத்திய மந்திரி கிஷன்…

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கும் பணியின் நிலை குறித்தும், இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் கண்டறியப்பட்ட தொல்பொருட்களில் தமிழ் மொழியின் ஆதிக்கம் அதிகம் இருப்பதால், டிஜிட்டல் கல்வெட்டு அருங்காட்சியகம் தமிழகத்தின் கீழடியில்…

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.3 ஆக பதிவு.. சுனாமி…

பப்புவா நியூ கினியா நாட்டில் 6.3 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியா நாட்டில் போர்ட் மோர்ஸ்பிக்கு வடமேற்கில் 448 கி.மீ. தொலைவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

கைத்துப்பாக்கியுடன் நோர்வூட்டில் ஒருவர் கைது!!

கைத்துப்பாக்கியை தன்னுடைய உடலில் மறைத்துவைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ், நோர்வூட் வெஞ்சர் தோட்டத்தில் வசிக்கும் ஒருவர் நேற்று (13) கைது செய்யப்பட்டுள்ளார். நோர்வூட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மேற்படி நபர், காலி பூஸ்ஸ இராணுவ முகா​மில்…

பெற்றோர் விவாகமானவரா என்பதை நீக்க வேண்டும்!!

பிறப்புப் பதிவின் போது பெற்றோர் திருமணமானவரா என வினவப்படுவதை கூடிய விரைவில் நீக்க வேண்டும். சமூகத்தில் தனித்து வாழக்கூடிய திறன் ஒரு தாய்க்கு இருக்க வேண்டும். அது வெட்கப்படுவதற்கான விடயமல்ல என சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர்…

கர்நாடகத்தில் மோடி சுனாமி வீசுகிறது – முதல் மந்திரி பசவராஜ் பொம்மை!!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி இதுவரை 6 முறை கர்நாடகத்திற்கு வந்து சென்றுள்ளார். ஒவ்வொரு முறையும் அவர் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்நிலையில், கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மை…

சீனாவின் பாதுகாப்பு, வளர்ச்சி நலனுக்காக ராணுவத்தை அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக…

சீனாவின் தேசிய இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலனுக்காக ராணுவத்தை அசைக்க முடியாத இரும்பு பெருஞ்சுவராக உருவாக்குவேன் என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். தொடர்ந்து 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்,…

பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று திறப்பு!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை காலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து ஐயப்பனை தரிசிப்பார்கள். இதுதவிர மாத பூஜை, திருவிழா காலங்களிலும் கோவில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவது வழக்கம்.…

வராதீர்கள் வாய்ப்பே இல்லை: அவுஸ்திரேலியா!!

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக செல்வோரை அந்நாட்டு அரசாங்கம் எச்சரித்துள்ளது. படகு மூலம் செல்வதன் ஆபத்தையும் பொருட்படுத்தாது சிலர் குடிபெயர முயல்வதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவிக்கிறது. இலங்கையும்…

மாணவனை கண்டால் தகவல் தாருங்கள்!!

பதுளை - ஸ்பிரிங்வெளி தோட்ட, நாவலவத்தையில் (4ஆம் பிரிவு) வசித்து வந்த விவேகானந்தன் ரகுமான் (வயது -16) என்ற பாடசாலை மாணவன் காணாமல் போயுள்ளார். குறித்த மாணவனை கடந்த பெப்ரவரி மாதம் 15 ஆம் திகதியிலிருந்து காணவில்லை என பெற்றோர் பதுளை பொலிஸ்…

மலாவி, மொசாம்பிக்கில் புயல் தாக்கி 56 பேர் பலி!!

மலாவி, மொசாம்பிக்கில் வீசிய பயங்கர புயல் தாக்கி 56 பேர் பலியாகி விட்டனர். தென்னாப்பிரிக்காவை தாக்கி வரும் பிரெடி புயல் நேற்று மலாவி மற்றும் மொசாம்பிக் பகுதியை கடுமையாக தாக்கியது. இதில் இரு பகுதிகளும் கடுமையாக சேதம் அடைந்தன. இரு இடத்திலும்…

பியர் குடித்துவிட்டு பிக்கு ரகளை!!

போயான தினத்தன்று பியர் குடித்த பிக்கு ஒருவர் பெரும் ரகளையில் ஈடுபட்டுள்ளார். அந்த பௌத்த பிக்குக்கு பியர் விற்பனைச் செய்த சம்பவம் தொடர்பில் கலால் திணைக்கள அதிகாரிகளால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. சிவனொளிபாதமலைக்குள் செல்லும்…

ஐ.பி.எஸ். அதிகாரியை கரம் பிடிக்கும் பஞ்சாப் மந்திரி!!!

பஞ்சாப் மாநிலம், ரூப்கர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த்பூர் சாகிப் தொகுதியில் இருந்து முதல் முறையாக ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏ.வாக தேர்ந்து எடுக்கப்பட்டவர் ஹர்ஜோத் சிங் பெயின்ஸ். தற்போது முதல்-மந்திரி பகவந்த் மான் அரசில் கல்வி மந்திரியாக…

ஆணையாளர்கள் வசம் செல்லவுள்ள உள்ளூராட்சி மன்றங்கள்!!

19ஆம் திகதியுடன் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்தும் ஆணையாளர்களின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அரசாங்கத்தின் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பெயர் கூற விரும்பாத அரச உயர்மட்ட அதிகாரி ஒருவர் இந்தத் தகவலை வழங்கினார். உள்ளூராட்சி…

பேராதனை பல்கலைக்கு அனுமதிக்கப்பட்ட மாணவர்கள் மனநல பரிசோதனைக்கு!!

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களுக்கும் புதிதாக உள்வாங்கப்பட்டுள்ள மாணவர்கள் இனிமேல் மனநலப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பிரதி உபவேந்தர்டெரன்ஸ் மதுஜித் தெரிவித்துள்ளார். பேராதனைப்…

திட்டமிட்டபடி இன்று நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு!!

திட்டமிட்டபடி இன்று (14) நள்ளிரவு முதல் ஒருநாள் பணிப்புறக்கணிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக கூட்டமைப்பின் இணை…

இஸ்ரேலில் லட்சக்கணக்கானோர் திரண்ட வரலாறு காணாத போராட்டம்!!

இஸ்ரேல் நாட்டில் புதிதாக இயற்றப்பட்ட நீதித்துறை தொடர்பான சட்ட மசோதாவிற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நீதித்துறை மறுசீரமைப்பு சட்ட மசோதாவின்படி அரசு நியமிக்கும் 9 பேர் கொண்ட குழுக்கள் மூலமாக, சுப்ரீம் கோர்ட்டைத் தவிர மற்ற…

தமிழகத்தில் வடமாநிலத்தவர் மீது தாக்குதலா?- பீகார் அரசிடம் அறிக்கை கேட்கும் பா.ஜனதா!!

தமிழகத்தில் பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக சமீபத்தில் போலி செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, வதந்தி பரப்பியவர்கள்…

மடகாஸ்கரில் சோகம் – கடலில் படகு கவிழ்ந்த விபத்தில் 22 பேர் பலி!!

ஆப்பிரிக்க நாடான மடகாஸ்கரில் இருந்து பிரான்ஸ் நாட்டின் மயோட் தீவு நோக்கி ஒரு படகு சென்று கொண்டிருந்தது. சட்ட விரோதமாக மேற்கொள்ளப்படும் இந்தப் பயணங்கள் பெரும்பாலும் ஆபத்தானதாக அமைந்து விடுகின்றன. மொத்தம் 47 பேர் இந்த படகில் பயணம் செய்தனர்.…

வேலூரில் பெண் போலீஸ் வீட்டில் 50 பவுன் நகை கொள்ளை!!

வேலூர் ஓட்டேரி கமலாட்சிபுரம் மாந்தோப்பு 2-வது தெருவை சேர்ந்தவர் அனிதா (வயது 37) வேலூர் மாவட்ட குற்ற ஆவண காப்பகத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 10-ந் தேதி இரவு வீட்டை பூட்டி விட்டு இடையன்சாத்து…

வடகொரியாவில் மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்தினால் அங்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்படும்-…

வடகொரியா உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனைகளை நடத்தி அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு மிரட்டல் விடுத்து வருகிறது. அண்மையில்…

கோப்பாய் கலாசாலை நூற்றாண்டு மெய்வல்லுனர் போட்டி வியாழன்!!

கோப்பாய் ஆசிரிய கலாசாலையின் நூற்றாண்டையொட்டிய மெய்வல்லுனர் போட்டிகள் 16.03.2023 வியாழன் பிற்பகல் 2 மணிக்கு கலாசாலை மைதானத்தில் நடைபெறவுள்ளன. கலாசாலை உடலாளர் மன்ற ஏற்பாட்டில் அதிபர் ச. லலீசன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில்…

அத்தியாவசிய சேவையாக அறிவிக்கப்பட்ட தபால் சேவை!

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தி ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவுக்கமைய ஜனாதிபதி செயலாளரினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.…

பேச்சுக்கு வராவிட்டால் நாளை நாடு முடங்கும்?

பேச்சுவார்த்தைக்கு வர அரசாங்கம் மறுத்தால், நாளை புதன்கிழமை (15) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தொழிற்சங்கங்கள் எச்சரிக்கை விடுத்துள்ளன. குறைந்தபட்சம் ஆறு மாத காலத்துக்கு எந்தவொரு வரியையும் அரசாங்கத்தால் மாற்றியமைக்க…

உலக வங்கி 65 மில்லியன் டொலர் நிதி உதவி !!

உலக வங்கியிடமிருந்து 65 மில்லியன் டொலர் கிடைக்கப் பெறவுள்ளதாக சுகாதார பராமரிப்பு முறையை வலுப்படுத்துவது தொடர்பான உலக வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார மேம்பாட்டு பணியகம் வெளியிட்டுள்ள…

இன்றைய வானிலை தொடர்பான அறிவிப்பு !!

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்…

எடப்பாடி பழனிசாமி மீது போலீசார் வழக்கு: தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க.வினர் திடீர்…

அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் மதுரை சென்றிருந்தார். அங்கு விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வருவதற்காக விமான நிலைய பஸ்சில் பயணம் செய்தார். அப்போது அவருடன் பயணித்த சிவகங்கை…

யாழ்.நாகர் கோவிலில் துப்பாக்கி சூடு – ஆலய சப்பர கொட்டகைக்கும் தீ வைப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு துப்பாக்கி சூட்டில் முடிவடைந்தது. துப்பாக்கி சூடுகள் நடத்தப்பட்டு , அப்பகுதிகளில் துப்பாக்கி சன்னங்களின் வெற்றுக்கோதுகள்…

நூறு வயதில் பல்கலைக்கழக கல்வியைத் தொடரும் மூதாட்டி!

கனடாவில் நூறு வயது மூதாட்டியொருவர் பல்கலைக்கழக கல்வியைத் தொடர்கின்றமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில அநேகமானவர்கள் தங்களது 20 வயதுகளில் கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர். ஆனால், மிரியம் டீஸ் (Miriam…