;
Athirady Tamil News

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி- 2 (வீடியோ, படங்கள்)

0

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி- 2 (வீடியோ, படங்கள்)

ஆறாமாண்டு விழிநீர் அஞ்சலி.. அமரர். முருகேசு இராமலிங்கம்

பாசத்தைப் பயிராக்கி நேசத்தை உறவாக்கி
நேர்மையுடன் வாழ்ந்த எங்கள் தெய்வமே
காலத்தை வீணாக்காது கம்பீர நடையுடன் உமது
வாழ்நாளைப் போக்கி வந்தீரே
எல்லோருடனும் இனிமையாய் பழகி
எம்மையும் இனிதாய் வழி நடத்தி வந்தீர்.

உள்ளத்தை ஒருங்கிணைத்து
ஒற்றுமையை வலுப்படுத்தி
உமக்கென சில உறவுகளையும்
உருவாக்கி வந்தீரே..

இவற்றையெல்லாம் செய்து விட்டு
எங்களுடன் இருக்காமல்
இறைவனின் அரவணைப்பை
எளிதில் நாடிச் சென்றதேனோ..
ஆண்டுகள் ஆறானாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது..

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு மூன்றாம் வட்டாரம், யாழ்ப்பாணம், கொழும்பு, டென்மார்க் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த முன்னாள் அதிபர் அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வினை முன்னிட்டு அவரது குடும்மபத்தின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்ட வாழ்வாதார உதவிகள்.. நேற்றையதினம் முதற்கட்டமாக உலருணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அமரத்துவமடைந்த அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்கள், அனலைதீவு மகா வித்தியாலயம், புங்குடுதீவு மத்திய கல்லூரி, குருநாகல் மத்திய மகா வித்தியாலயம், யாழ். வைத்தீஸ்வரா கல்லூரி, யாழ். கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலயம், யாழ் ஸ்டான்லி காலேஜ் ஆகியவற்றின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றியதுடன் சமய, சமூக தொண்டராகவும் விளங்கியவர்.

அன்னாரின் ஆறாமாண்டு நினைவாக அவரது மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பில் அன்னாரின் குடும்பத்தினர் வழங்கிய நிதியில், முதல் நிகழ்வாக வவுனியா எல்லைக் கிராமத்தில் வதியும் வறுமைக் கோட்டில் வாழும் பெண் தலைமைத்துவக் குடும்பங்களை சேர்ந்த சிலருக்கு வாழ்வாதார உதவியாக பெறுமதியான உலருணவுப் பொதிகள் நேற்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டது நீங்கள் அறிந்ததே.

இதனைத் தொடர்ந்து அமரர் இராமலிங்கம் அவர்களின் இன்றைய திதிநாளை முன்னிட்டு இரண்டாவது நிகழ்வாக இன்றையதினம் மதியம் வன்னி எல்லைக் கிராமமொன்றில் அமரர்.முருகேசு இராமலிங்கம் அவர்களின் நினைவாக விசேட மதிய உணவும் வழங்கப்பட்ட்து,

மேற்படி நிகழ்வில், “மாணிக்கதாசன் நற்பணி மன்ற” முக்கியஸ்தர்களில் ஒருவரான திருமதி.பவளராணி நவரெட்ணம் அவர்களின் ஒழுங்கமைப்பில் மாணிக்கதாசன் நற்பணி மன்ற கிராமிய ஒருங்கிணைப்பாளர்களும் மற்றும் அக்கிராம முக்கியஸ்தர்கள் ஆகியோருடன் அக்கிராமப் பொதுமக்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

அமரத்துவமடைந்த அமரர்.திரு.முருகேசு இராமலிங்கம் அவர்களுக்கு தாயக உறவுகளோடு, மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் ஆழ்ந்த இரங்கலோடு அஞ்சலி செலுத்துவதோடு அமரர்.திரு.முருகேசு இராமலிங்கம் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நிகழ்வுக்கு நிதிப் பங்களிப்பினை வழங்கிய அவரது குடும்பத்தினருக்கு தாயக உறவுகளுடன் இணைந்து “மாணிக்கதாசன் நற்பணி மன்றமும்” தனது மேலான நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறது.

நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்.. -என்றும்
மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்..

தலைமைச் செயலகம்.
மாணிக்கதாசன் நற்பணி மன்றம்.
வவுனியா, இலங்கை.

11.06 20223

புங்குடுதீவு அமரர்.மு. இராமலிங்கம் அவர்களின் நினைவாக, விசேட மதிய உணவு வழங்குதல்.. பகுதி- 2 (வீடியோ)

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1

§§§§§§§§§§§§§§§§§§§§§§§§§

“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos

You might also like

Leave A Reply

Your email address will not be published.