;
Athirady Tamil News

ரஷியா மீது உக்ரைன் தாக்குதல் – 7 பேர் பலி

0

மாஸ்கோ,

உக்ரைன் , ரஷியா போர் 4 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி வருகின்றன. போர் நிறுத்த முயற்சிகளை அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மேற்கொண்டார். ஆனால் முயற்சி தோல்வியடைந்த நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

7 பேர் பலி
இந்நிலையில், ரஷியா மீது உக்ரைன் இன்று டிரோன், ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியது. ரஷியாவின் பெல்கொரோட், அஸ்ட்ராகான் மாகாணங்கள் மீது உக்ரைன் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.