புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (படங்கள், வீடியோ)
################################
ஆண்டுபல இப்புவியில் அமைதியாய் வாழ்ந்திருந்து
உறவுகளை ஆறாத்துயரில் தவிக்கவிட்டு
ஆலாலகண்டணவன் பாதமதில் வாழ
விதியின் விதிப்படி விண்ணுலகம் போனீரோ!
நல்லொழுக்க நாயகர்களாய்
பிள்ளைகளை வளர்த்தெடுத்து
அயல் வீட்டுப்பிள்ளைகளையும்
பாசத்தோடு அரவணைத்து
உறவுகள் அனைவருக்கும் பாசம் காட்டி
பாரினிலே பாசத்திற்கு உதாரணமாய்
வாழ்ந்த பெற்றோரே
உம் பிரிவினை எம்முள்ளம் எப்படித்தான் ஏற்கும்.
ஆண்டுகள் பல போனாலும் உங்கள்
நினைவுகள் அழிந்து போகாது…
புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.
வேலாயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 14ம் ஆண்டு
நினைவுநாளை முன்னிட்டும் அன்னாரின் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் சார்பாக அன்னாரின் மகளும் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவருமான திருமதி.சதாசிவம் பிரணவசொரூபி அவர்களின் நிதிப் பங்களிப்பில் பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு நடத்தப்பட்டது.
மேற்படி நிகழ்வில் பயனாளிகளுடன் அவர்களின் குடும்பத்தினரும் கலந்து சிறப்பித்ததுடன், புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.
வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 14ம் ஆண்டு
நினைவுநாளை முன்னிட்டும் அவர்களுக்கு முதலில் ஒரு நிமிட மௌன வணக்க அஞ்சலி செலுத்தியதுடன், மலரஞ்சலி செலுத்தப்பட்டு தொடர்ந்து தேவார பாராயணம் பாடப்பட்டு அதனைத் தொடர்ந்து பயனாளிகளுக்குமான உலருணவுப் பொதிகளும் வழங்கப்பட்டது.
வவுனியா தவசிக்குளம் கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 30 குடும்பங்களுக்கு உலர் உணவு பொதியினை தருமாறு எங்களிடம் அவ் கிராம சணசமூக நிலையத்தின் செயலாளர் கு. குமரனின் கேட்டத்திற்கு இணங்க மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து நடத்தி இருந்தார் என்பதுடன் சன சமூக செயலாளர் அவர்கள் கரங்களால் 30பொதிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வானது புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.
வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 14ம் ஆண்டு
நினைவுநாளை முன்னிட்டும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள் மற்றும் உற்றார், உறவினர்கள் சார்பாக அன்னாரின் மகளும் பிரான்ஸ் நாட்டில் வாழ்பவருமான திருமதி.சதாசிவம் பிரணவசொரூபி அவர்களின் நிதிப் பங்களிப்பில் வழங்கப்பட்டது.
மேற்படி நிகழ்வுக்காக நிதிப் பங்களிப்பு வழங்கிய திருமதி.சதாசிவம் பிரணவசொரூபி குடும்பத்துக்கும், இதனை முன்னின்று நெறிப்படுத்தும் “மாணிக்கதாசன் நற்பணி மன்றத்துக்கும்” கலந்து கொண்ட அக்கிராமத்தவர்களினால் மனமார்ந்த நன்றிகள் தெரிவிக்கப்பட்டது.
இதேவேளை மாணிக்கதாசன் நற்பணி மன்றமும் தாயக சொந்தங்களோடு இணைந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்வதோடு, இறையடி சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி. வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் ஆத்மா சாந்தியடைய எந்நாளும் இறைவனை இறைஞ்சு வேண்டுகிறோம்.
#இரண்டாவது_கிராமம்
இதேவேளை புங்குடுதீவு 4ம் வட்டாரத்தைச் சேர்ந்த அமரர் முருகேசு வேலாயுதபிள்ளை அவர்களின் 36ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டும், அன்னாரின் துணைவியார் அமரர் திருமதி.
வேலாயுதயுதபிள்ளை தங்கம்மா அவர்களின் 14ம் ஆண்டு
நினைவுநாளை முன்னிட்டும் இரண்டாவது நிகழ்வாக வவுனியா பூவரசன்குளம் கிராம பிரிவில் உள்ள வறுமைகோட்பட்ட 20 பயனாளிக்களுக்கு சமூர்த்தி உத்தியோகத்தர் சுரேந்திரன் சரணியா அவர்கள் கேட்டத்திற்கு அமைய 20பொதிகள் பயனாளிகளுக்கு மாணிக்கதாசன் நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர் திரு.வரதராசா பிரதீபன் அவர்கள் நேரிய முறையில் ஒழுங்கமைத்து வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
“மாணிக்கதாசன் நற்பணி மன்றம்” இன, மத, பிரதேச வேறுபாடுகளை மட்டுமல்ல அரசியல் வேறுபாடுகளையும் கடந்து நடுநிலைமையுடன் அனைத்து மக்களையும் வாழ்வாதாரத்தில் முன்னேற்றவும், மற்றும் மாணவ மாணவிகளின் கல்விக்கு கரம் கொடுக்கவும் வேண்டுமெனும் ஒரே நோக்கில் செயல்பட்டு வருவதும், அதன் உயரிய நோக்கமாக “தடைகளைத் தகர்த்து சமூகத்தை உயர்த்து” எனும் குறிக்கோளில் செயலாற்றுவது நீங்கள் அறிந்ததே..
“நலிவுற்றவர்களுக்கே நற்பணி இயக்கம்”.. என்றும்
“மக்களுக்காகவே மாணிக்கதாசன் நற்பணி மன்றம்”..
தலைமையகம்,
“மாணிக்கதாசன் பவுண்டேசன்”
வவுனியா, இலங்கை.
புங்குடுதீவு அமரர்கள் வேலாயுதபிள்ளை தங்கம்மா ஆகியோரின் சிரார்த்த தினத்தில் “50 பெறுமதியான உலருணவுப் பொதிகள் வழங்கும்” நிகழ்வு.. (வீடியோ)
“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” செய்திகளை பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்..
http://www.athirady.com/tamil-news/category/news/%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%ae%be%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1































































“மாணிக்கதாசன் நற்பணி மன்ற” வீடியோக்கள் அனைத்தையும் பார்வையிட கீழே உள்ள “லிங்கை” அழுத்தவும்.. https://www.youtube.com/channel/UCcqovJhy5b-K7R3CrQz3dLg/videos