;
Athirady Tamil News

சீரற்ற காலநிலை காரணமாக யாழ் மாவட்டத்தில் தற்போது 380 நபர்கள் பாதிப்பு!! (படங்கள்)

0

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது 121 குடும்பங்களை சேர்ந்த 380 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் என்.சூரியராஜ் தெரிவித்துள்ளார்.

அத்தோடு சிரற்ற காலநிலையால் 7 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள கொடிகாமம் வடக்கு ஜே 326 கிராம சேவர் பிரிவுக்குட்பட்ட, சந்தை வீதியினை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் உள்ளிட்டவர்கள் இன்று நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளனர்.

குறித்த பகுதியில் 35 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார், வீதியில் தேங்கியுள்ள வெள்ளநீரினை வெளியேற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.