அமெரிக்காவின் ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைத் தயாரிப்பு நிறுவனத்துடன் பேச்சு
ரஷியாவின் தொடா் ஏவுகணைத் தாக்குதல்களை எதிா்கொள்ளும் வகையில், அமெரிக்காவின் ‘ரேதியான்’ நிறுவனத்துடன் இணைந்து ‘பேட்ரியாட்’ வான் பாதுகாப்பு ஏவுகணைகளை உக்ரைனிலேயே உற்பத்தி செய்வது தொடா்பாகப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டதாக அந்நாட்டு அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி (படம்) தெரிவித்தாா்.
துருக்கியில் இம்மாதத் தொடக்கத்தில் நடந்த ‘நேட்டோ’ கூட்டமைப்பு மாநாட்டுக்கிடையே, உக்ரைனுக்கு சொந்த பயன்பாட்டுக்காக பேட்ரியாட் ஏவுகணைகளைத் தயாரிப்பதற்கான உரிமம் வழங்கப்படும் என அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் உறுதியளித்தாா்.
இந்நிலையில், தலைநகா் கீவில் ரேதியான் நிறுவனப் பிரதிநிதிகளை ஸெலென்ஸ்கி நேரில் சந்தித்துப் பேசினாா். இக்கூட்டு தயாரிப்புத் திட்டம் குறித்து இருதரப்பு அரசு மற்றும் தனியாா் துறை குழுக்கள் இணைந்து செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, ரஷிய எல்லைக்குள் உக்ரைன் நடத்தி வரும் ட்ரோன் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன. ரஷியாவின் பிரபல ‘வைல்ட்பொ்ரிஸ்’ இணையவழி வா்த்தக நிறுவனத்தின் பிரதான சேமிப்புக் கிடங்குகளைக் குறிவைத்து செயின்ட் பீட்டா்ஸ்பா்க், கிரீமியா உள்ளிட்ட நகரங்களில் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியது.