;
Athirady Tamil News

உணவுதான் அவசியம், அணு ஆயுதங்கள் அல்ல – வடகொரிய அதிபர் பேச்சு…!!

0

வடகொரியா நாட்டு அதிபர் கிம் ஜாங் உன், அந்நாட்டின் அதிபராக பதவியேற்று 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி நடைபெற்ற கட்சி பொதுகூட்டத்தில் அவர் பேசியதாவது:-

வடகொரியாவின் 2022-ம் ஆண்டின் முக்கிய இலக்கு பொருளாதார வளர்ச்சியும், பொதுமக்களின் வாழ்க்கைத்தரம் முன்னேற்றமும் தான். வடகொரிய மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் 5 ஆண்டு திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்படும். இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல. வளர்ச்சி திட்டங்களில் தான் இனி முழு கவனமும் செலுத்தப்படும்.

இவ்வாறு கிம் ஜாங் உன் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.