;
Athirady Tamil News

சந்திரபாபு நாயுடுவுக்கு கொரோனா…!!

0

சந்திரபாபு நாயுடுவின் மகன் நாரா லோகேஷ் தெலுங்கு தேசம் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ளார்.

இவர் போகி பண்டிகை அன்று இவருடைய பெரியம்மாவும், பாஜக முக்கிய பிரமுகருமான புரந்தரேஸ்வரி வீட்டிற்கு சென்றிருந்தார். பின்னர் ஐதராபாத்தில் உள்ள தனது வீட்டிற்கு திரும்பினார். இந்த நிலையில் நாரா லோகேஷ்க்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தது. இதையடுத்து அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. நேற்று வந்த பரிசோதனை முடிவில் நாரா லோகேஷ்க்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.

மேலும் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையில் இன்று காலை சந்திரபாபு நாயுடுவுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவரும் வீட்டில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இந்த நிலையில் அவரை சந்தித்த அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனாவிலிருந்து விரைவில் மீண்டு வந்து பொது மக்களுக்கு சேவை செய்ய உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.