;
Athirady Tamil News

வவுனியாவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்து : ஒருவர் படுகாயம்!! (படங்கள்)

0

வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக ஏ9 வீதியில் இன்று (01.02.2022) மாலை 4.30 மணியளவில் இரு டிப்பர் வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

ஹோரவப்போத்தானை வீதியுடாக ஓமந்தை பகுதி நோக்கி டிப்பர் பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக டிப்பர் வாகனத்தினை சாரதி திடிரேன பிரக் பிடித்துள்ளார்.

டிப்பர் வாகனத்திற்கு பின்பக்கமாக வந்து கொண்டிருந்த மற்றுமொரு டிப்பர் குறித்த டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானதுடன் இதனிடையே வீதிக்கு அருகே நின்ற மோட்டார் சைக்கிலும் டிப்பருடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது

இவ் விபத்தில் மோட்டார் சைக்கில் நின்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் பின்பக்கமாக வந்த டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கில் என்பன பகுதியளவில் சேதமடைந்துள்ளது

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.