;
Athirady Tamil News

யாழ். பல்கலை தற்காலிக உதவி விரிவுரையாளர் மரணம்!!

0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடக கற்கை நெறியின் தற்காலிக உதவி விரிவுரையாளராக பணியாற்றிய இளம் ஊடகவியலாளரான தில்காந்தி நவரட்ணம் உயிரிழந்துள்ளார்.

அதிகாலை 5 மணி அளவில் சுகவீனம் காரணமாக மொணராகலை – சிறுகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தில்காந்தி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

6 மாதங்களுக்கு முன்னர் அவருக்கு இருதய சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

ஊவா மாகாணத்தின் பின்தங்கிய பிரதேசம் ஒன்றில் இருந்து, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றியதன் மூலம் தில்காந்தி தமது சொந்த ஊருக்கும் மலையகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.