;
Athirady Tamil News

கர்நாடகாவில் பஜ்ரங் தள் நிர்வாகி வெட்டி கொலையால் பதற்றம்..!!!

0

கர்நாடகாவின் ஷிவமொகா நகரில் 26 வயதான பஜ்ரங் தள் அமைப்பின் நிர்வாகி நேற்றிரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இதையொட்டி சீகேஹட்டி பகுதியில் பல வாகனங்கள் தீ வைத்த எரிக்கப்பட்டன. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஷிவமொகா நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளதாக ஷிவமொக்கா மாவட்ட காவல் துணை ஆணையர் செல்வமணி தெரிவித்துள்ளார்.

கொலை குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது, சட்டம் ஒழுங்கை பராமரிக்க உள்ளூர் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பஜ்ரங் தள் நிர்வாகி படுகொலை தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா மந்திரி கே.எஸ்.ஈஸ்வரப்பா, இந்த கொலையால் தாம் மிகவும் வருத்தமடைந்ததாக கூறினார். நிலைமை குறித்து ஆராய தாம் ஷிவமொக்கா செல்வதாகவும், ரவுடியிசத்தை அனுமதிக்க மாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.