;
Athirady Tamil News

சாரதியின் கவனயீனத்தால் பறிபோன பிஞ்சு உயிர்!!

0

கட்டானை, கதிரான பேஸ்லைன் வீதியில் இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டியின் பின்னால் அமர்ந்து பயணித்த 11 வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்..

இந்த விபத்து நேற்று (23) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கதிரான சந்தியில் இருந்து கோபுர சந்தியை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி திடீரென யு வடிவில் திரும்ப முற்பட்ட போது கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த சிறுவன் திம்பிரிகஸ்கடுவ பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.