;
Athirady Tamil News

சுன்னாகம் பொதுநூலக சிறுவர் வாசிப்பு வட்டத்தின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு!! (படங்கள்)

0

உலக சிறுவர் புத்தக தினத்தை முன்னிட்டு சுன்னாகம் பொதுநூலக சிறுவர் வாசிப்பு வட்டத்தின் சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு இன்று மாலை 2.30 மணியளவில் நூலக கூடத்தில் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வில் பிரதமவிருந்தினராக யாழ்மாவட்ட கலாசார உத்தியோகத்தர் திரு இராஜரட்ணம் கிருஷ்ணகுமார் அவர்களும்,
சிறப்பு விருந்தினராக வலிக்காம் வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் திரு சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன் (இயல்வாணன்) அவர்களும்,
கெளரவ விருந்தினராக வலி தெற்கு பிரதேசசபைத் தவிசாளர் திரு கருணாகரன் தர்சன் அவர்களும்,
மற்றும் வலி தெற்கு பிரதேசசபை உப தவிசாளர்,
வலி தெற்கு பிரதேசசபை செயலாளர் ஆகியிருக்கு கலந்துகொண்டிருந்தார்கள்.

சிறுவர் வாசகர்வட்டதின் உறுப்பினர்களுக்கான சீருடை உறுப்பினர்கள் அனைவருக்கும் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து சிறுவர் வாசகர்வட்டதின் உறுப்பினர்களின் உரைகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றிருந்தன.

நிகழ்வின் முக்கிய அம்சமாக சிறுவர் வாசகர் வட்ட உறுப்பினர்களின் ஆக்கங்களை தாங்கிய “முகிழ்” சஞ்சிகை வெளியிட்டு வைக்கப்பட்டது.
வாழ்த்துரையை ‘எங்கட புத்தகங்கள்’ குலசிங்கம் வசீகரன் அவர்கள் நிகழ்த்தியிருந்தார்கள்.
தொடந்து கலை நிகழ்ச்சிகளும் விருந்தினர் உரைகளும் இடம்பெற்றிருந்தது.

நிகழ்வின் இறுதி அம்சமாக இன்றிய தினம் பிறந்தநாள் காணும் வலிகாமம் கல்வி வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு சுப்பிரமணியம் ஸ்ரீகுமரன் அவர்களுக்கு தவிசாளர் மாலை அணிவிக்க, மாணவர்கள் வாழ்த்து தெரிவிக்க நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.