;
Athirady Tamil News

சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி பயணி உயிரிழந்துள்ளார் .!!

0

எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்தின் கீழ் இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார் .

புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்றிரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது .

சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் ( வயது 37 ) என்பவரே உயிரிழந்தார் .

” உயிரிழந்தவர் வயாவிளான் நோக்கி பேருந்தில் பயணித்துள்ளார் . எனினும் தூக்கத்தில் அவர் வயாவிளானில் இறங்கவில்லை . பேருந்து நடத்துனரும் கவனயீனத்தால் கவனிக்கவில்லை .

மீண்டும் பேருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்து புன்னாலைக்கட்டுவனில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசலுக்காக வரிசையில் காத்திருந்துள்ளது . அதனால் கீழே இறங்கிய பயணி நிலத்தில் அமர்ந்திருந்துள்ளார் . அதனை அவதானிக்காக சாரதி பேருந்தை எடுத்த போது பயணி மீது ஏறியுள்ளது .

பயணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் பேருந்து சாரதி அங்கிருந்து தலைமறைவாகியிருந்தார் ” என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது .

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை திடீர் இறப்பு விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் இறப்பு விசாரணைகளை முன்னெடுத்ததுடன் உடற்கூற்று பரிசோதனைக்கு அறிக்கையிட்டார் .
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.