;
Athirady Tamil News

ஹெரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேர் கைது !!

0

மட்டு ஏறாவூரில் ஹரோயின் மற்றும் கஞ்சாவுடன் 4 பேரை இன்று (15) கைது செய்ததுடன் ஹெரோயின், கஞ்சா மற்றும் ஒரு மோட்டர்சைக்கிள் ஒரு துவிச்சக்கரவண்டி என்பனவற்றை மீட்டுள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் ஏறாவூர் பெலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் ஏறாவூர் பகுதியிலுள்ள குறித்த பகுதியில் வீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது ஹெரோயினை எடுத்து கொண்டு சென்ற ஒருவரை மடக்கி பிடித்து கைது செய்ததுடன் அவரிடமிருந்து 130 மில்லிக்கிராம் ஹெரோயின் மீட்டனர்.

இதனை தொடர்ந்து மைலம்பாவெளி பகுதியில் வீதியில் வைத்து மோட்டார் சைக்கிள் மற்றும் துவிச்சக்கர வண்டியில் பிரயாணித்த மட்டக்களப்பு கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து ஆயிரம் மில்லிக்கிராம், கஞ்சாவையும், மோட்டார் சைக்கிளில் பிரயாணித்த மட்டக்களப்பு நாவற்கேணி மற்றும் மைலம்பாவெளி பிரதேசத்தைச் சேர்ந்த இருவரை கைது செய்ததுடன் அவர்களிடமிருந்து 2 ஆயிரத்து 50 மில்லிக்கிராம் கஞ்சாவையும் ஒரு மோட்டர்சைக்கிள் ஒரு துவிச்சக்கரவண்டி மீட்டனர்.

இதில் கைது செய்யப்பட்ட 4 பேரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.