;
Athirady Tamil News

அமெரிக்காவை மிரள வைக்கும் சென்னை, புனே, குஜராத் – வெள்ளை மாளிகை அறிக்கை

0

வாஷிங்டன்,

இந்தியாவின் அசுரத்தனமான தொழில் வளர்ச்சியை பார்த்து வல்லரசு நாடான அமெரிக்கா வியக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக, சென்னை, புனே மற்றும் குஜராத் ஆகிய இந்திய உற்பத்தி மண்டலங்கள், அமெரிக்காவின் பாரம்பரிய தொழில் நகரங்களுக்கு கடும் சவாலாக உருவெடுத்துள்ளதாக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெரும் சரக்கு இடமாற்ற மோசடி
அமெரிக்காவின் வர்த்தகப் பிரிவானது அண்மையில் “பெரும் சரக்கு இடமாற்ற மோசடி” என்ற பெயரில் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கடுமையான இறக்குமதி வரிகளில் இருந்து தப்பிக்க, சீன பொருள்கள் இந்தியா போன்ற மூன்றாம் நாடுகள் வழியாக மாற்றி அனுப்பப்படுவதாக அதில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை, புனே, குஜராத் ஆகிய பகுதிகளில் இருக்கும் உற்பத்தி மையங்கள் வழியாக பம்புகள் மற்றும் கம்ப்ரசர்கள் போன்ற சாதனங்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதாக கூறப்பட்டுள்ளது.

பயங்கர போட்டி நகரங்கள்
இந்தியாவின் இந்த அசுர வேக தொழில் போட்டியை குறிக்கும் வகையில், அமெரிக்க வெள்ளை மாளிகை இந்த நகரங்களை பயங்கர போட்டி நகரங்கள் என வர்ணித்துள்ளது. அதாவது, அமெரிக்காவின் தொழில் நகரங்களை பாதிக்கும் வெளிநாட்டு போட்டி நகரங்களை அவர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். தோற்றத்தை வைத்து இந்த வார்த்தை கூறப்படவில்லை, மாறாக அமெரிக்க பொருளாதாரத்திற்குச் சிக்கல் தரும் ‘சகோதரி நகரங்கள்’ என்ற வர்த்தக ரீதியிலான ஒப்பீடாகவே இது பார்க்கப்படுகிறது.

விதிமீறல் இல்லை
அமெரிக்க தொழிலாளர்களுக்கு இது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தினாலும், சட்ட ரீதியாக இந்திய நிறுவனங்களோ அல்லது இந்திய நகரங்களோ எந்தவிதமான நேரடி விதிமீறல்களிலோ அல்லது வரி ஏய்ப்புகளிலோ ஈடுபடவில்லை என்பதை அமெரிக்க அறிக்கையே ஒப்புக்கொண்டுள்ளது. எவ்வாறாயினும், சென்னை உள்ளிட்ட இந்திய நகரங்களின் அசுர வளர்ச்சியை அமெரிக்கா உற்றுநோக்க தொடங்கியுள்ளது. உலக அரங்கில் இந்திய தொழில் துறைக்கு கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரமாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.