;
Athirady Tamil News

பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளோம்!!

0

ஆளும் கட்சி உறுப்பினர்களால் தமது கட்சி மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதிபருடன் கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபடவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.

கடந்த 9 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவ்வாறு கலந்துரையாடப்படவுள்ளது.

இது தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் திங்கட்கிழமை நடைபெறும் என கட்சி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அனுரகுமார திஸாநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.