;
Athirady Tamil News

டெல்லியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தில் தீ விபத்து..!!

0

டெல்லியில் பல இடங்களில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட்டு வரும் நிலையில், இன்று மதியம் கட்டுமான பணி நடைபெறும் புதிய பாராளுமன்ற வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. பாராளுமன்ற கட்டிடத்தில் தீப்பிடித்ததை அறிந்ததும் அங்கு ஐந்து தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன.

ஆனால் சிறிய அளவிலான விபத்து என்பதால் தீயணைப்பு வீரர்கள் வருவதற்கு முன்பே பாராளுமன்றத்தில் உள்ள தீயணைப்பு ஊழியர்கள் தீயை அணைத்துள்ளதாக தீயணைப்புத் துறை அதிகாரி தெரிவித்துள்ளார். தீ உடனடியாக அணைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.