;
Athirady Tamil News

மற்றுமொரு கொலைச் சம்பவம்!!

0

ராகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெந்தலியத்தபாலுவ பிரதேசத்தில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று (07) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

உயிரிழந்தவர் கனேமுல்ல, கெந்தலியத்தபாலுவ பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கொலையைச் செய்த சந்தேகநபரால் உயிரிழந்தவரின் கைத்தொலைபேசி திருடப்பட்டுள்ளது.

பின்னர் கொலை செய்யப்பட்ட நபரும் அவரது இரண்டு மகன்களும் சம்பவம் குறித்து விசாரிக்க சந்தேகநபரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர் குறித்த மூவரையும் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.

படுகாயமடைந்த நபர் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலையை செய்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் காயமடைந்திருந்ததால் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக பொலிஸ் பாதுகாப்பில் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.