;
Athirady Tamil News

9 ஆம் திகதி ஆர்ப்பாட்டம் : எண்னாயிரம் பொலிஸ், இராணுவம் கொழும்புக்கு!!

0

எதிர்வரும் ஒன்பதாம் திகதி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகக் கோரி பாரிய ஆர்ப்பாட்டம் நடாத்தப்படவுள்ள நிலையில், கொழும்பின் பாதுகாப்புக்கு 8 ஆயிரம் பொலிஸாரும், இராணுவத்தினரும் மேலதிகமாக அழைக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது.

தற்போதும் கொழும்பில் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ள படையினருக்கு மேலதிகமாக இந்த 8 ஆயிரம் பேரும் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தற்போதும் படிப்படியாக கொழும்பு நோக்கி வருகை தருவதாக பாதுகாப்பு தகவல்கள் தெரிவித்தன.

3 ஆயிரம் பொலிஸாரும். 5 ஆயிரம் இராணுவத்தினரும் இவ்வாறு வெளி மாகாணங்களில் இருந்து கொழும்புக்கு பாதுகாப்பு பணிகளுக்காக இவ்வாறு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் தெரிவித்தன.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”

You might also like

Leave A Reply

Your email address will not be published.