;
Athirady Tamil News

கேரளாவில் மாயமான வாலிபர் காட்டுக்குள் சுட்டுக் கொலை..!!

0

கேரள மாநிலம் பைசன் பள்ளத்தாக்கு பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் கடந்த மாதம் 27-ந் தேதி நண்பர்களுடன் வேட்டையாடுவதற்காக இடுக்கியில் உள்ள வனப்பகுதிக்குச் சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் மகேந்திரன் பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.இதுகுறித்து அவரது உறவினர்கள் ராஜாக்காடு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை தேடி வந்தனர். கடந்த 8 நாட்களாக அவரை போலீசார் தேடி வந்தனர். இது தொடர்பாக குஞ்சித்தண்ணியை சேர்ந்த சிலரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் விசாரித்தனர். இதில் மகேந்திரன் சுட்டுக்கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரது உடலை, நண்பர்கள் இடுக்கி வனப்பகுதியில் ரகசியமாக புதைத்துள்ளதும் விசாரணையில் கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் போலீசார், பொத்தமேடு மற்றும் ஒட்டமரம் இடையே உள்ள வனப்பகுதியில் மகேந்திரன் உடலை தோண்டி எடுத்தனர். வேட்டையாடுவதற்கு இடையே தவறுதலாக மகேந்திரன் சுடப்பட்டதாகவும், அவரது கூட்டாளிகள் அவரது சடலத்தை காட்டுக்குள் ரகசியமாக புதைத்திருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.