;
Athirady Tamil News

கேரளாவில் மழைக்கால பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு பெற்ற அதிர்ஷ்டசாலியை தேடும் அதிகாரிகள்..!!

0

கேரளாவில் அரசே லாட்டரி குலுக்கல் நடத்தி வருகிறது. அரசின் பெரும்பாலான வருவாய் லாட்டரி விற்பனை மூலமே கிடைக்கிறது. இதற்காக ஓணம், தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகை காலங்களிலும் மழைக்கால பம்பர் லாட்டரி சீட்டுகளை அரசு விற்பனை செய்து வருகிறது. இந்த ஆண்டு ஓணம் பம்பர் குலுக்கல் முதல் பரிசு ரூ. 25 கோடி என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் விற்பனை தற்போது தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் மழைக்கால பம்பர் லாட்டரி குலுக்கல் 2 நாட்களுக்கு முன்பு நடந்தது. இதன் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். இந்த அதிர்ஷ்ட சீட்டு எர்ணாகுளத்தில் விற்பனை ஆகியுள்ளது. இரண்டாம் பரிசு ரூ.50 லட்சம் ஆகும். இந்த சீட்டுகளை வாங்கிய அதிர்ஷ்டசாலி யார்? என்பது இதுவரை தெரியவில்லை. கடந்த 2 நாட்களாக அதிர்ஷ்டசாலியை லாட்டரி விற்பனை துறை அதிகாரிகள் தேடி வருகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.