;
Athirady Tamil News

மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மரியாதை..!!

0

ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரவுபதி முர்மு 64 சதவீத வாக்குகளை பெற்று அமோக வெற்றி பெற்றார். இன்று அவர் பதவியேற்கிறார். பாராளுமன்ற மைய மண்டபத்தில் காலை 10 மணி அளவில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது. பதவியேற்புக்கு முன்னதாக, மகாத்மா காந்தி நினைவிடத்தில் திரவுபதி முர்மு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பதவியேற்பு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பிரதமர் மோடி, மத்திய மந்திரிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.