;
Athirady Tamil News

வருமான வரிதாக்கல் செய்ய இன்று கடைசி நாள்..!!

0

2021-22-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் மும்முரமாக நடந்து வருகிறது. மேற்படி ஆண்டுக்கான வரிதாக்கல் செய்வதற்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடைசி நாள் ஆகும். இதில் நேற்று முன்தினம் மாலை வரை 5 கோடிக்கும் அதிகமானோர் வருமான வரிதாக்கல் செய்துள்ளனர். மீதமுள்ளவர்களும் இன்றைக்குள் வரிதாக்கல் செய்யுமாறு வருமான வரித்துறை கேட்டுக்கொண்டு உள்ளது. இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில், நேற்று இரவு 8.36 மணி வரை 5 கோடிக்கு அதிகமான வருமான வரிதாக்கல் முடிந்துள்ளது. இதற்கான கடைசி நாள் 31-ந்தேதி (இன்று) என்பதால் நீங்களும் உங்கள் வரிதாக்கலை செய்து அபராதத்தை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என வருமான வரி செலுத்துவோரை அறிவுறுத்தி இருந்தது. கடந்த 2020-21-ம் நிதியாண்டுக்கான வருமான வரிதாக்கல் 5.89 கோடி அளவுக்கு நடந்து இருந்தது. எனவே இந்த ஆண்டும் அதிக எண்ணிக்கையில் வரிதாக்கல் நடைபெறும் என வருமான வரித்துறை நம்பிக்கை தெரிவித்து உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.