;
Athirady Tamil News

வீதிகளை புனரமைக்க கோரி- சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டம்!!

0

வலி.மேற்கில் உள்ள வீதிகளை தற்காலிகமாகவேனும் புனரமைக்குமாறு கோரிக்கை விடுத்து நாளை செவ்வாய்க்கிழமை சங்கானையிலும் மூளாயிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

காலை 8 மணி தொடக்கம் 10 மணி வரையான இரு மணிநேரம் இப்போராட்டம் இடம்பெறும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இப்போராட்டத்தில் வலி.மேற்கு மக்களை அணிதிரண்டு கலந்துகொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

யாழ்.மாவட்டத்திலேயே வலிகாமம் மேற்கு பிரதேசத்தின் ஊடாகச் செல்லும் பெருந்தெருக்களே இதுவரை புனரமைக்கப்படாமல் உள்ளன. குறிப்பாக, யாழ்ப்பாணம் – மானிப்பாய் – காரைநகர் வீதி, மாவடி – மூளாய் வீதி, வட்டுக்கோட்டை – பொன்னாலை வீதி என்பன மோசமாகச் சேதமடைந்துள்ளன.

இந்த வீதிகளுடாக மக்கள் போக்குவரத்துச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வீதிகளை புனரமைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் மழை காலத்திற்கு முன்னர் தற்காலிகமாவேனும் புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியும் இப்போராட்டம் இடம்பெறவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்பாகவும் மூளாய் அரசடிச் சந்தியிலும் போராட்டங்கள் இடம்பெறவுள்ளன.

போராட்டத்தின்போது குறித்த வீதிகள் முடக்கப்பட்டு போக்குவரத்துக்களும் தடைப்படும் எனவும் தெரியவருகின்றது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.