உடன் பதவி விலகுங்கள்: அமைச்சர் அதிரடி!!
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட பணிப்பாளர் சபையை உடனடியாக பதவி விலகுமாறு, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்துக்கும் அறிவிக்காமல் கொட்டாவை மாகும்புர போக்குவரத்து நிலையத்திலிருந்து கொழும்பு கோட்டை வரையான விசேட பஸ் சேவையை இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்துள்ளார்.