;
Athirady Tamil News

மோட்டார் சைக்கிள் மீது அரசு பஸ் மோதியது: ஆந்திர வாலிபர்கள் 3 பேர் பலி..!!

0

ஆந்திர மாநிலம் நந்தயால் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் நாகராஜ், சீனு, ஜெயபால், ஸ்ரீகாந்த். இவர்கள் 4 பேரும் நெல் அறுவடை செய்யும் எந்திரத்தில் வேலை செய்து வந்தனர். தற்போது நெல் அறுவடை எந்திரம் ராய்ச்சூர் மாவட்டம் மஸ்கி தாலுகா கூடத்தூர் பகுதியில் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் 4 பேரும் கூடத்தூரில் தங்கி இருந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் நாகராஜ், சீனு, ஜெயபால், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கர்நாடக அரசு பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர். சிறிது நேரத்தில் நாகராஜ், சீனு, ஜெயபால் பரிதாபமாக இறந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீகாந்த் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து மஸ்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.