;
Athirady Tamil News

ஜம்மு காஷ்மீர் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர்- ஆளுநர் புகார்..!!

0

ஜம்முவில் நடைபெற்ற விழாவில் ஒன்றில் பேசிய ஜம்மு காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளதாவது: சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து காரணமாக பிரிவினைவாதம், ஊழலால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டிருந்தது. அது நமது சகோதர சகோதரிகளுக்கு உரிய உரிமைகளை மறுத்தது. பயங்கரவாதத்தை பரப்ப பாகிஸ்தானால் அந்த பிரிவு பயன்படுத்தப்பட்டது. பிரதமர் மோடி 370வது பிரிவை ரத்து செய்து, இந்த பகுதியில் அமைதி, முன்னேற்றம் மூலம் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தினார். ஜம்மு காஷ்மீர் மக்கள் எப்போதும் அமைதியை விரும்புகின்றனர். ஆனால் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தூண்டி விட்டது. இங்குள்ள அதன் அனுதாபிகள் பூமியில் உள்ள இந்த சொர்க்கத்தை அழிக்க முயன்றனர். இருப்பினும் தற்போது நிலைமை மாறிவிட்டது. குடும்ப அடையாள எண் வழங்கும் நடவடிக்கை குறித்து யாரும் தவறாக எண்ண வேண்டாம். இது ஜம்மு காஷ்மீரில் சமூக நலத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு மக்களுக்கு உதவும். ஜம்மு காஷ்மீரில் அரசுப் பணிகளில் பயங்கரவாதிகளின் உறவினர்கள் உள்ளனர். முந்தைய காலத்தில் பயங்கரவாதிகளின் குடும்பத்தினர் எப்படி அரசுப் பணிகளில் சேர்க்கப்பட்டனர்? பிரிவினைவாதிகளுக்கு எப்படி அரசு வேலை வழங்கப்பட்டது? இப்போது நடக்கும் வெளிப்படையான மற்றும் தகுதி அடிப்படையிலான ஆட்சேர்ப்பு குறித்த கேள்விகளை எழுப்புபவர்கள், முதலில் தங்களை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். அரசு பணிகளில் ஆள் தேர்வுகள் கேள்விக்குள்ளானபோது, நாட்டின் முதன்மையான புலனாய்வு அமைப்பால் அது விசாரிக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட எந்த குற்றவாளியும் தப்பிக்க மாட்டார்கள் என்பதை மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.